அகர்தலா: கரோனா பாதித்த 225 கர்ப்பிணிகளுக்குப் பிறந்த ஆரோக்கியமான குழந்தைகள்
கரோனா பாதிக்கப்பட்ட 225 கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை
அகர்தலா: அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா பாதிக்கப்பட்ட 225 கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை மருத்துவர் ஜெயந்தா ரே கூறுகையில், முதல் கரோனா அலையின்போது, 198 கரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றது. இதில் 60 பேருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் நடந்தது. இதுவே இரண்டாவது கரோனா அலையின்போது 27 பேருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் நடைபெற்றுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் குறைந்தபட்சம் 225 கரோனா பாதித்த கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். அந்த வகையில் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் பங்கு சிறப்பாக அமைந்திருந்தது.
Advertisement
Advertisement
கரோனா பாதித்த கர்ப்பிணிகளின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் மிகச் சிரமமான பணியை மருத்துவர்கள் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.