சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்: இரு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு 
இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்: இரு வாரங்களில் முடிவெடுக்க உத்தரவு

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

DIN

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு எதனடிப்படையில் மதிப்பெண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து 2 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி முன்பு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம்,

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் நலனில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று மத்திய அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று தெரிவித்தது.

இது தொடர்பாக ஆஜரான மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், 3 வாரங்களில் அனைத்து விவகாரங்களிலும் விரைந்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

எனினும், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் 2 வாரங்களில் அனைத்து முடிவுகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுகள், மாநிலப் பாடத்திட்ட பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யும் மாநில அரசுகளுக்கும் வழிகாட்டியாய் அமையும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT