முகப்பு
இந்தியா

கேரளத்தில் ஒரேநாளில் 16,229 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 16,229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 16,229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,09,520 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 16,229 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,71,057ஆக உயர்ந்துள்ளது. 
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 135 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 9,510ஆக உயர்ந்துள்ளது. கரோணாவிலிருந்து இன்று 25,860 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 24,16,639ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 1,74,526 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.