முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 14,152 பேருக்கு கரோனா

மகாராஷ்டித்தில் இன்று மேலும் 14,152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

மகாராஷ்டித்தில் இன்று மேலும் 14,152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 14,152 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,05,565ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் இன்று மேலும் 289 பேர் பலியானார்கள். 

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 98,771ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 20,852 பேர் மீண்டனர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 55,07,058ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 1,96,894 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 14,75,476 பேர் வீடுகளிலும், 7,430 பேர் நிறுவனங்களிலும் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.