முகப்பு
இந்தியா

குஜராத்தில் ஜூன் 7 முதல் 100% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி

குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் ஜூன் 7 முதல் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 4 ஜூன், 2021 at 4:41 PM
குஜராத்தில் ஜூன் 7 முதல் 100% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி
பகிர்:


ஆமதாபாத்: கரோனா பெருந்தொற்று பரவலின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் ஜூன் 7 முதல் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இந்த முடிவை எடுத்திருப்பதாக அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அரசு அலுவலகங்களும் ஜூன் 5ஆம் தேதி சனிக்கிழமையும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மே மாதம் முதல் குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது கரோனா பாதிப்பு குஜராத்தில் குறைந்து வருவதையடுத்து இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.