முகப்பு
இந்தியா

புது தில்லியில் புதிதாக 400 பேருக்கு கரோனா பாதிப்பு: கேஜரிவால்

மேலும் கரோனா உறுதியாகும் விகிதமும் 0.5 சதவீதமாகக் குறைந்திருப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
புது தில்லியில் புதிதாக 400 பேருக்கு கரோனா பாதிப்பு: கேஜரிவால்
பகிர்:

புது தில்லி: புது தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 400 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா உறுதியாகும் விகிதமும் 0.5 சதவீதமாகக் குறைந்திருப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் கரோனா பரவல் குறைந்து வருவதால், சில தளர்வுளை அறிவித்திருக்கும் அரவிந்த் கேஜரிவால், வரும் வாரத்திலும் பாதிப்பு குறைந்தால் அடுத்தக்கட்ட தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை புது தில்லியில் புதிதாக 523 பேருக்கு கரோனா உறுதியானது. 50 பேர் பலியாகினர். கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 36 சதவீதமாக இருந்த நிலையில் அது தற்போது 1 சதவீதத்துக்கும் குறைவாகக் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →