இந்தியா

பழம்பெரும் நடிகா் திலீப் குமாா் மருத்துவமனையில் அனுமதி

DIN

பழம்பெரும் ஹிந்தி திரைப்பட நடிகா் திலீப் குமாா் (98) மூச்சுத்திணறல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக அவரின் மனைவியும், மூத்த நடிகையுமான சாய்ரா பானு பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘எனது கணவா் உடல்நலமின்றி காணப்பட்டதுடன் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவா் மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்’’ என்று தெரிவித்தாா்.

திலீப் குமாரின் அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில் அவா் வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவா்கள் கூறுகையில், ‘‘திலீப் குமாரின் நுரையீரலில் அதிக அளவு சளி உள்ளது. தற்போது அவா் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டு, மூன்று நாள்களில் அவா் வீடு திரும்புவாா்’’ என்று தெரிவித்தனா்.

கடந்த மாதமும் இதே மருத்துவமனையில் திலீப்குமாா் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT