முகப்பு
இந்தியா

கரோனா பாதிப்புக்கு ஏற்ப மாநிலங்களுக்குத் தடுப்பூசி: வழிகாட்டு நெறிமுறைகள்

கரோனா பாதிப்புகளுக்கேற்ப மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:21 AM
பகிர்:

கரோனா பாதிப்புகளுக்கேற்ப மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலாக உள்ள நிலையில், கரோனா தடுப்பூசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, மக்கள் தொகை எண்ணிக்கை, கரோனா பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கப்படும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளை மாநிலங்கள் வீணடித்தால் ஒதுக்கப்படும் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் சரியான விலையில் தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →