பாரமுல்லாவில் பயங்கர தீ விபத்து: 6 பேர் காயம்; வீடுகள் நாசம் 
இந்தியா

பாரமுல்லாவில் பயங்கர தீ விபத்து: 6 பேர் காயம்; வீடுகள் நாசம்

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா நகரில் நூர்பாக் என்ற இடத்தில் உள்ள குடிசை வீடுகளில் வியாழக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான குடிசைகள் நாசமாயின.

ANI


பாரமுல்லா: ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா நகரில் நூர்பாக் என்ற இடத்தில் உள்ள குடிசை வீடுகளில் வியாழக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான குடிசைகள் நாசமாயின.

இது குறித்து இந்திய ராணுவத்தினர் கூறுகையில், வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் குடிசைகளில் தீப்பிடித்தது. உடனடியாக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து வந்து, தீயைக் கட்டுப்படுத்த போராடினர். இதன் விளைவாக அதிகாலை 2 மணியளவில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. 

இந்த தீ விபத்தில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. 6 பேர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 170 - 200 பேர் பாதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT