FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாரமுல்லாவில் பயங்கர தீ விபத்து: 6 பேர் காயம்; வீடுகள் நாசம்

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா நகரில் நூர்பாக் என்ற இடத்தில் உள்ள குடிசை வீடுகளில் வியாழக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான குடிசைகள் நாசமாயின.

Updated On : 11 ஜூன் 2021, 12:51 pm IST
பாரமுல்லாவில் பயங்கர தீ விபத்து: 6 பேர் காயம்; வீடுகள் நாசம்
பகிர்:


பாரமுல்லா: ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா நகரில் நூர்பாக் என்ற இடத்தில் உள்ள குடிசை வீடுகளில் வியாழக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான குடிசைகள் நாசமாயின.

இது குறித்து இந்திய ராணுவத்தினர் கூறுகையில், வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் குடிசைகளில் தீப்பிடித்தது. உடனடியாக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து வந்து, தீயைக் கட்டுப்படுத்த போராடினர். இதன் விளைவாக அதிகாலை 2 மணியளவில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. 

இந்த தீ விபத்தில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. 6 பேர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 170 - 200 பேர் பாதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments