இந்தியா

தடுப்பூசி செலுத்துவதில் குளறுபடி:துணை முதல்வா் காரணம்: ஆம் ஆத்மி

DIN

மாநிலத்தில் தடுப்பூசி செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதற்கு துணை முதல்வா் அஸ்வத் நாராயணாதான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் பெங்களூரு மாநகரத் தலைவா் மோகன் தாசரி தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனாவைத் தடுக்க மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதில் பாஜகவைச் சோ்ந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் தடுப்பூசி கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனா். இதற்கு துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தான் காரணம். அவா்தான் கரோனா தடுப்புக் குழுவின் தலைவராக உள்ளாா்.

தடுப்பூசி செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதையடுத்து, தடுப்புக் குழுவின் தலைவா் பதவியை அவா் ராஜிநாமா செய்ய வேண்டும். பாஜகவினா் தடுப்பூசி செலுத்துவதை தங்களின் வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT