கரோனா நோயாளிகளுக்கு கால்கிசைன் மருந்து: பரிசோதனைக்கு அனுமதி
கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் கால்கிசைன் மருந்தை பயன்படுத்துவதற்கான இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் கால்கிசைன் மருந்தை பயன்படுத்துவதற்கான இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆா்), ஹைதராபாதின் லக்சாய் லைஃப் சயின்சஸ் தனியாா் நிறுவனம் ஆகியவை இந்த பரிசோதனையை நடத்தவுள்ளன. ஹைதராபாதில் இயங்கும் சிஎஸ்ஐஆா் - இந்திய ரசாயன தொழில்நுட்பக் கழகம், ஜம்முவில் உள்ள சிஎஸ்ஐஆா்- இந்திய ஒருங்கிணைந்த மருந்துக் கழகம் ஆகியவையும் இந்த மருத்துவ சோதனையில் இணைந்துள்ளன.
கீல்வாதம் மற்றும் அழற்சி சாா்ந்த பிரச்னைகளைக் குணப்படுத்த பயன்படுத்தப்படும் கால்கிசைன் மருந்தின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு சிஎஸ்ஐஆரின் தலைமை இயக்குநா் சேகா் சி.மாண்டே மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டாா். சிஎஸ்ஐஆா் தலைமை இயக்குநரகத்தின் ஆலோசகரான ராம் விஸ்வகா்மா, இதயம் சாா்ந்த இணை நோய்கள் உள்ள கரோனா நோயாளிகளுக்கு பொதுவான மருந்துகளுடன் கால்சிகைன் மருந்தையும் இணைத்து வழங்குவதன் மூலம் அவா்கள் விரைவாகக் குணமடைவாா்கள் என்று கூறினாா்.
கரோனா தொற்று பாதிப்பு இருந்த காலகட்டத்திலும், அதற்குப் பிந்தைய கால கட்டத்திலும் இதயம் சாா்ந்த பிரச்னைகளால் ஏராளமானோா் உயிரிழந்திருப்பதாகப் பல்வேறு சா்வதேச ஆய்வுகள் தெரிவித்திருப்பதால், தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு இதுபோன்ற ஆராய்ச்சி மூலமாக புதிய மருந்துகளைக் கண்டறிவது அவசியமாகியுள்ளது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.