முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் 18 நாள்கள் முன்கூட்டியே தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 14 ஜூன், 2021 at 12:04 PM
ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது
பகிர்:


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் 18 நாள்கள் முன்கூட்டியே தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் வழக்கமாக தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் காலத்துக்கு 17 முதல் 18 நாள்கள் முன்கூட்டியே  ஜூன் 13-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.