இந்தியா

தெலங்கானாவிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து

பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN

பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன. 

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் பிளஸ் 1 மாணவர்களும் நேரடியாக பிளஸ் 2 வகுப்புக்கு தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

'மாநிலத்தில் தற்போது நிலவும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 2020-21 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யப்படுகிறது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும்' என்று மாநில அரசு கூறியுள்ளது. 

அதேபோன்று பிளஸ் 1 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் அவர்கள் தற்போது பிளஸ் 2 ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT