இந்தியா

தெலங்கானாவிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து

பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN

பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன. 

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் பிளஸ் 1 மாணவர்களும் நேரடியாக பிளஸ் 2 வகுப்புக்கு தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

'மாநிலத்தில் தற்போது நிலவும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 2020-21 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யப்படுகிறது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும்' என்று மாநில அரசு கூறியுள்ளது. 

அதேபோன்று பிளஸ் 1 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் அவர்கள் தற்போது பிளஸ் 2 ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT