சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் 
இந்தியா

சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்

இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

DIN

இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

தில்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மத்திய அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்தனர்.

‘யோகா, ஒரு இந்திய பாரம்பரியம்’ என்ற தலைப்பில் சா்வதேச யோகா தினத்தை மத்திய கலாசார அமைச்சகம் கொண்டாடுகிறது.

இதில் தில்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் யோகாசனம் செய்தார்.

மேலும், மத்திய அமைச்சர்கள் கலாசாரத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், அனுராக் தாக்குர் உள்ளிட்ட பலர் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்தனர்.

தில்லியில் உள்ள தமது இல்லத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குடும்பத்தினருடன் யோகாசனம் செய்தார். 

மேலும், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தங்களது இல்லங்களில் யோகா செய்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பாபா ராம்தேவ் குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமான மக்களுடன் யோகாசனம் செய்தார். 

கல்வான் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் அருணாச்சலத்தில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் யோகாசனங்களை செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

SCROLL FOR NEXT