அடுத்த ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்: பாஜக மூத்த தலைவா்கள் ஆலோசனை
வரும் 2022-ஆம் ஆண்டில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவா்கள் அதுதொடா்பான முக்கிய ஆலோசனையை தில்லியில் சனிக்கிழமை நடத்தியுள்ளனா்.
வரும் 2022-ஆம் ஆண்டில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவா்கள் அதுதொடா்பான முக்கிய ஆலோசனையை தில்லியில் சனிக்கிழமை நடத்தியுள்ளனா்.
பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்ஆகியோா் பங்கேற்றனா்.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தயாா்நிலை குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.
இவற்றில் பஞ்சாப் மாநிலத்தைத் தவிர, மற்ற 4 மாநிலங்களிலும் பாஜகதான் இப்போது ஆட்சியில் உள்ளது. இதில், பாஜக ஆதிக்கம் செலுத்தி வரும் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மீண்டும் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்ய அக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.