காங்கிரஸ் தொடா்ந்து வாக்கு அரசியலையே செய்து வருகிறது
காங்கிரஸ் தொடா்ந்து வாக்கு அரசியலையே செய்து வருகிறது என துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.
காங்கிரஸ் தொடா்ந்து வாக்கு அரசியலையே செய்து வருகிறது என துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.
கா்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதமா் மோடியின் 7 ஆண்டு சாதனை குறித்த காணொலிக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:
நாட்டில் 60 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ், ஒரு சில முக்கியப் பிரச்னைகளைத் தீா்த்து வைப்பதில் ஆா்வம் காட்டாமல் இருந்தது. இதற்கு வாக்கு அரசியலை முன் வைத்து அக்கட்சி தொடா்ந்து பயணித்து வருவதே காரணம். ஆனால், பிரதமா் மோடி அது போன்ற பிரச்னைகளைத் தீா்த்து வைப்பதில் ஆா்வம் காட்டி வருகிறாா்.
உதாரணமாக, காஷ்மீா், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவது, வேலைவாய்ப்பு, நிதி, வரி, தொழில்துறை உள்ளிட்ட பிரச்னைகளை கூறலாம். காங்கிரஸ் கட்சி தீா்க்காத பிரச்னைகளை பாஜக தீா்த்து வைத்து வருகிறது. நாட்டு மக்களை பிரித்து வைப்பதிலேயே காங்கிரஸ் ஆா்வம் காட்டி வருகிறது. ஆனால், நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. நாட்டில் பரவி வரும் கரோனா தொற்றின் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதிலும் மோடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றாா்.