கர்நாடகத்தில் புதிதாக 4,272 பேருக்கு கரோனா
கர்நாடகத்தில் புதிதாக 4,272 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதிதாக 4,272 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக 4,272 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,126 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 115 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,31,026 ஆக உயர்ந்துள்ளது. இதில், 26,91,123 பேர் குணமடைந்துவிட்டனர். 34,654 பேர் பலியாகியுள்ளனர்.
1,05,226 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 2.58 சதவிகிதம். இறப்பு விகிதம் 2.69 சதவிகிதம்.