நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த் பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் கந்த்தின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் கந்த்தின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அமிதாப் கந்த். கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் நிதி ஆயோக் அமைப்பின் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அமைச்சரவை நியமனக் குழுவின் ஒப்புதலின் படி அவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.