இந்தியா

மும்பையில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன்

DIN


மும்பை: மும்பையில் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் கிடைத்த எண்ணிக்கையை விட 10 சதவீதம் கூடுதலாகும்.

அதாவது, மும்பை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட செரோ ஆய்வில், 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஏற்கனவே கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. ஒன்று முதல் 18 வயதுக்குள்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட செரோ ஆய்வில் கிடைத்திருக்கும் தகவலில், 51.18 சதவீதம் குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது. இது கடந்த மார்ச் மாதம் 39.04 சதவீதமாக இருந்தது. இது மிகவும் அதிகம் என்று கருதப்படுகிறது.

இந்த ஆய்வில், 10 - 14 வயதுடையவர்களில் 53.43 சதவீதம் பேருக்கும், 1 - 4 வயதுடையவர்களில் 51.04 சதவீதம் பேருக்கும் கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT