மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 
இந்தியா

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

உடல்நலக்குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

DIN

உடல்நலக்குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் தொற்றிலிருந்து மீண்டார். இதனால் தொடர்ந்து பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 

இந்நிலையில் ஜூன் மாதத் தொடக்கத்தில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக  தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT