தொகுதி மறுசீரமைப்பு: ஜம்மு-காஷ்மீர் செல்கிறது ஆணையம்
அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாட தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஜூலை 6-9 இடையே ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ளதாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாட தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஜூலை 6-9 இடையே ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ளதாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"தொகுதி மறுசீரமைப்பு ஆணையத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாய் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான கூட்டத்துக்குப் பிறகு இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்து தங்களது மதிப்புமிக்க பரிந்துரைகளைத் தருவார்கள் என ஆணையம் எதிர்பார்க்கிறது. இதன்மூலம், மறுசீரமைப்புப் பணிகள் விரைவில் நிறைவடையும்."
கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் ஜம்மு-காஷ்மீரில் நாடாளுமன்ற மற்றும் பேரவைத் தொகுதிகளை மறுவரையறை செய்யவுள்ளது.