இந்தியா

ஜார்க்கண்டில் குண்டு வெடிப்பு: 2 பாதுகாப்பு வீரர்கள் பலி

PTI

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூங் மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் நக்சல்கள் நடத்திய குண்டுவெடிப்பில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூவர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஹோயாஹட்டு கிராமத்தில் இன்று காலை 8.45 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மாவட்ட காவல்துறையின் சிறப்புப் பிரிவின் கீழ் உள்ள இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 

இந்த குண்டுவெடிப்பில் ஜார்க்கண்ட் ஜாகுவார்ஸின் மற்ற இரண்டு பேர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவரும் காயமடைந்தனர். 

மேலும், அப்பகுதியில் குழு ஒன்று அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT