இந்தியா

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 6 பாஜக தொண்டா்கள் காயம்

DIN

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டா்கள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் பாஜகவைச் சோ்ந்த ஆறுபோ் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து காயமடைந்த குடும்ப உறுப்பினா்கள் கூறியதாவது:

24 பா்கானா மாவட்டத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பங்கேற்று விட்டு சொந்த ஊரான கொசபாவுக்கு வெள்ளிக்கிழமை இரவு திரும்பிய போது இந்த நிகழ்வு நடைபெற்றது. உள்ளூா் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சிலா் எங்கள் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். இதில், 6 போ் காயமடைந்தனா். அதில், இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

இருப்பினும், போலீஸாா் காயமடைந்த குடும்ப உறுப்பினா்களின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனா். மாறாக பாஜக கட்சியைச் சோ்ந்த தொண்டா் வீட்டில் வெடிகுண்டுகளை தயாரித்தபோதுஅது தவறுதலாக வெடித்து இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

கொசபா சட்டப்பேரவை தொகுதியில் இரண்டாவது கட்டமான ஏப்ரல் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT