மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 80,705 பேருக்கு கரோனா தடுப்பூசி
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 80,705 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 80,705 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மொத்த தடுப்பூசிகளில் 79,748 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியும், 957 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் மொத்தம் 2,43,4,966 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பின்போது,
மகாராஷ்டிரத்தில் கரோனா நிலைமை குறித்து கவலை அளிக்கிறது. பரிசோதனைகள் குறைக்கப்பட்டது, சரியான வழிமுறை பின்பற்றாததே கரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும், வைரஸ் தொற்று குறையவேண்டுமெனில், அதற்கான வழிமுறைகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் அவசியம் பின்பற்ற வேண்டும் சுகாதார மருத்துவர் வி.கே.பால் கூறியுள்ளார்.
கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் சில பகுதிகளில் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், மார்ச் 15 முதல் மார்ச் 21 வரை நாக்பூர் நகரப் பகுதியில் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று தெரிவித்தார்.
வியாழக்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் மேலும் 14,317 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு தொடங்கி இதுவே அதிகபட்ச ஒருநாள் தொற்றாகும். இதுவரை 2,26,6,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 1,06,700 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.