கோப்புப்படம் 
இந்தியா

தேசியவாத காங்கிரஸில் இணைந்தார் சாக்கோ

​காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.சி. சாக்கோ தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முன்னிலையில் அவரது கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.

DIN


காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.சி. சாக்கோ தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முன்னிலையில் அவரது கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை எனக் கூறி கடந்த 11-ம் தேதி விலகிய நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

கட்சியில் இணைந்தவுடன் சாக்கோ கூறியது:

"இன்றைய சூழலில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை தேவை. ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியே பாஜகவுக்கு மாற்றாக வர முடியும். நான் முன்பிருந்த கட்சியில் அதற்கான முன்னெடுப்பை எடுப்பதாகத் தெரியவில்லை."

இதைத் தொடர்ந்து, சரத் பவார் கூறியது:

கேரள முதல்வர் என்னை அழைத்து, பிசி சாக்கோ தேசியவாத காங்கிரஸில் இணைவது மகிழ்ச்சி என்று கூறினார்.

மகாராஷ்டிரத்தில் மெகா கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சரியாக செயல்பட்டு வருகிறது. 

இன்றைய சூழலில் நாட்டில் மூன்றாவது அணியின் தேவை உள்ளது. ஆனால், அதற்கு இன்னும் உருவம் கொடுக்கப்படவில்லை. பல்வேறு கட்சிகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். அதன் தேவையை சீதாராம் யெச்சூரியும் இன்று குறிப்பிட்டிருந்தார்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT