கோப்புப்படம் 
இந்தியா

தேசியவாத காங்கிரஸில் இணைந்தார் சாக்கோ

​காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.சி. சாக்கோ தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முன்னிலையில் அவரது கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.

DIN


காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.சி. சாக்கோ தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முன்னிலையில் அவரது கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை எனக் கூறி கடந்த 11-ம் தேதி விலகிய நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

கட்சியில் இணைந்தவுடன் சாக்கோ கூறியது:

"இன்றைய சூழலில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை தேவை. ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியே பாஜகவுக்கு மாற்றாக வர முடியும். நான் முன்பிருந்த கட்சியில் அதற்கான முன்னெடுப்பை எடுப்பதாகத் தெரியவில்லை."

இதைத் தொடர்ந்து, சரத் பவார் கூறியது:

கேரள முதல்வர் என்னை அழைத்து, பிசி சாக்கோ தேசியவாத காங்கிரஸில் இணைவது மகிழ்ச்சி என்று கூறினார்.

மகாராஷ்டிரத்தில் மெகா கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சரியாக செயல்பட்டு வருகிறது. 

இன்றைய சூழலில் நாட்டில் மூன்றாவது அணியின் தேவை உள்ளது. ஆனால், அதற்கு இன்னும் உருவம் கொடுக்கப்படவில்லை. பல்வேறு கட்சிகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். அதன் தேவையை சீதாராம் யெச்சூரியும் இன்று குறிப்பிட்டிருந்தார்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்பாராமல் வரும் பணம்! மோசடியாளர்கள் வலையில் சிக்க வேண்டாம்! | Cyber Security | Cyber Shield

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

இலங்கையில் நாயகி ஊர்வலம்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

SCROLL FOR NEXT