முகப்பு
இந்தியா

இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கரோனா; 131 பேர் பலி

நாட்டில் இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 24,492 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 6-வது நாளாக நாட்டில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கரோனா; 131 பேர் பலி
பகிர்:


புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 24,492 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 6-வது நாளாக நாட்டில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, நாட்டில் கரோனா பாதிப்பு 1.14 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 131 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,58,856 ஆக உயர்ந்துள்ளது.

இன்று நாட்டில் கரோனா பாதித்து மருத்துவமனைகள் அல்லது வீடுகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,23,432 ஆக உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.