கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பலி 
இந்தியா

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலிப் காந்தி புதன்கிழமை பலியானார்.

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலிப் காந்தி புதன்கிழமை பலியானார்.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய திலிப் காந்திக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனைத் தொடர்ந்து தில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட திலிப் காந்தி புதன்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT