முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் நாள்தோறும் 1 லட்சம் பரிசோதனைகள்: சுகாதாரத் துறை

கர்நாடகத்தில் தினசரி மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்த்தப்படும் என அந்த மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:46 PM
கோப்புப்படம்
பகிர்:


கர்நாடகத்தில் தினசரி மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்த்தப்படும் என அந்த மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.

இதுபற்றி அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கரோனா 2-ம் அலையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் தினசரி மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளன."

Advertisement

அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகரும் இதனை சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments