கரோனா பரவல்: காஸியாபாத்தில் 144 தடை
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்த மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்த மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் வணிக வளாகங்கள், சந்தை, பள்ளி, கல்லூரி போன்ற பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹோலி போன்ற பண்டிகள் வருவதால், மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் காஸியாபாத்தில் மே 25-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.