இந்தியா

அலகாபாத்: மசூதிகளில் இரவில் ஒலிபெருக்கிகளுக்குத் தடை

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மசூதிகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை தலைவர் கே.பி.சிங் வலியுறுத்தியுள்ளார்.

அலகாபாத் பல்கலைக் கழக துணைவேந்தர் அளித்த புகாரின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை சிறப்பு கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றையும் காவல்துறை தலைவர் எழுதியுள்ளார்.

அதில் அலகாபாத் உள்ளிட்ட 4 அண்டை மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்நாள் வரை இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை" - இளையராஜா

இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபில் தொடர் எளிய வழியா? கௌதம் கம்பீர் பதில்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT