இந்தியா

மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கரோனா தொற்று

DIN

மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். 

அனைவரும் கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT