தில்லியில் புதிதாக 823 பேருக்கு கரோனா
தில்லியில் புதிதாக 823 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 823 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 823 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,47,984 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 613 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.
Advertisement
இதுவரை மொத்தம் 6,33,410 பேர் குணமடைந்துள்ளனர். 10,956 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 3,618 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.