ராஜஸ்தானில் தானிய சேமிப்பு தொட்டியில் விழுந்த 5 குழந்தைகள் பலி
ராஜஸ்தானில் தானிய சேமிப்பு தொட்டியில் விழுந்த 5 குழந்தைகள் மூச்சுதிணறி பலியானார்கள்.
ராஜஸ்தானில் தானிய சேமிப்பு தொட்டியில் விழுந்த 5 குழந்தைகள் மூச்சுதிணறி பலியானார்கள்.
ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்த இரும்பினாலான தானிய சேமிப்பு தொட்டியை குழந்தைகள் சிலர் நேற்று பூட்டி விளையாடியுள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் அந்த தொட்டியில் சிக்கிக்கொண்டனர்.
எவ்வளவு முயற்சித்தும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இந்த சம்பவத்தில் மூச்சுதிணறி 4 பெண் குழந்தைகள் உள்பட 5 குழந்தைகள் பலியானார்கள். வயலில் வேலை முடிந்த பிறகு வீடு திரும்பிய பெற்றோர் தங்களது குழந்தைகளை தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் கிடைக்காததால் இறுதியில் தானிய சேமிப்பு தொட்டியில் பார்த்தபோது அதில் குழந்தைகள் சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.