முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் முதல்வருக்கு கரோனா தொற்று

உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்
பகிர்:

உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி, கரோனா பரிசோதனை, கரோனா தடுப்பூசி என மாநிலங்கள் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 

அரசியல் தலைவர்கள் சிலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

கரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் நலமாக இருக்கிறேன். எந்த பிரச்னையும் இல்லை. மருத்துவர்களின் மேற்பார்வையில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். 

கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளவும்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments