கரோனா பரவல்: உ.பி.யில் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை
உத்தரப்பிரதேசத்தில் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து மார்ச் 25 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
Advertisement
மேலும் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 24 முதல் 31 வரை விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது 3,036 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்