உத்தரகண்ட் முன்னாள் முதல்வருக்கு கரோனா தொற்று
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஸ் ராவத் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நால்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஸ் ராவத் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஐவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தொற்று பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள ஹரீஸ் ராவத் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொற்று உறுதியான நிலையில் ஹரீஸ் ராவத் உள்ளிட்ட 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.