மார்ச் 28-இல் சென்னையில் ராகுல் காந்தி பிரசாரம்
சென்னையில் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 28ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் மார்ச் 28-ம் தேதி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர்.