இந்தியா

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 2 தொகுதிகளில் 144 தடை

DIN

மேற்கு வங்கத்தில் நாளை (ஏப்ரல் 1)  2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பதட்டமான இரண்டு தொகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்டத் தேர்தல் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.1) நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவிற்காக 1,937 பகுதிகளில் 3,210 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 22.82 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இதனையொட்டி தம்லுக், நந்திகிராம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பதட்டமான வாக்குச்சாவடியுள்ள பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் பேரணியும் மேற்கொள்ளவுள்ளனர். இதனை கிழக்கு மிட்னாபூர் ஆட்சியர் ஸ்மிதா பாண்டே உறுதி செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT