உ.பி.யில் ஏப்.4 வரை பள்ளிகள் மூட உத்தரவு 
இந்தியா

கரோனா பரவல்: உ.பி.யில் ஏப்.4 வரை பள்ளிகள் மூட உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 4 வரை பள்ளிகள் மூடப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தெரிவித்துள்ளது. 

IANS

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 4 வரை பள்ளிகள் மூடப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை பள்ளிகள் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, மேலும் நான்கு நாள்களுக்குப் பள்ளிகள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை இரவு வரை, மேலும் 918 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. 10 பேர் உயிரிழந்தனர். ஒரேநாளில் 446 புதிய வழக்குகளுடன் லக்னோ முதலிடத்தில் உள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்தும் ஊழியர்களுக்கும் ஒரு நாள் விடுப்பு வழங்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். தனியார்த் துறையிலும் இதேபோன்ற ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT