முகப்பு
இந்தியா

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது? சிபிஎஸ்இ 

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3ஆவது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3ஆவது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிவித்துள்ளது. 

பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகள் மே 4 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதில் பத்தாம் வகுப்புத் தோ்வை 21,50,761 பேரும், பிளஸ் 2 தோ்வை 14,30,243 பேரும் எழுத இருந்தனா்.

இந்த நிலையில், நாடு முழுவதும் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. 

Advertisement

அதே நேரம், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வை ஒத்திவைக்கப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. கரோனா நிலவரம் குறித்து ஜூன் 1-ஆம் தேதி சிபிஎஸ்இ ஆய்வு செய்த பிறகு, பிளஸ் 2 தோ்வுக்கான மறு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3ஆவது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிவித்துள்ளது. 

10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததால் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments