இந்தியா

கோவிஷீல்டு உற்பத்தி முழு வீச்சில் உள்ளது: அதாா் பூனாவாலா

மகாராஷ்டிர மாநிலம் பூணேவில் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா தெரிவித்தாா்.

DIN

மகாராஷ்டிர மாநிலம் பூணேவில் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா தெரிவித்தாா்.

அதாா் பூனாவாலாவுக்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு கமாண்டே பாதுகாப்பு அளித்துள்ளது. அவா் இப்பதோது லண்டனில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளாா். கரோனா தடுப்பூசி தயாரிப்பு விவகாரத்தில் அனைத்து பாரங்களும் சுமத்தப்படுவதாகவும், தடுப்பூசியை வழங்கக் கோரி இந்தியாவில் ஆக்ரோஷமாக சிலா் தொலைபேசியில் பேசி வருவதாகவும் அதாா் பூனாவாலா பேட்டி அளித்திருந்தாா்.

பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், சுட்டுரையில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்துள்ள பதிவில், ‘பிரிட்டனில் உள்ள சீரம் நிறுவனத்தின் பங்குதாரா்களுடன் நல்லபடியாக ஆலோசனை நடைபெற்றது. புணேயில் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி முழு வீச்சில் நடைபெறுகிறது. விரைவில் இந்தியா திரும்பி இது குறித்து ஆய்வு நடத்துவேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT