இந்தியா

நடிகை கங்கனா ரணாவத் சுட்டுரை கணக்கு நிரந்தர முடக்கம்

DIN

புது தில்லி: ஹிந்தி திரைப்பட நடிகை கங்கனா ரணாவத் சுட்டுரை கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. தனது பதிவுகள் மூலம் அவா் தொடா்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ட்விட்டா் நிறுவனம் தெரிவித்தது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது, தோ்தலுக்கு பின் அந்த மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக நடிகை கங்கனா ரணாவத் தனது சுட்டுரை பக்கத்தில் பல பதிவுகளை வெளியிட்டிருந்தாா். அந்தப் பதிவுகளில் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அவா், வன்முறைக்கு மம்தா பானா்ஜிதான் காரணம் எனக் கூறி அவரை மோசமாக வசைபாடியிருந்தாா்.

ஏற்கெனவே இதுபோல் பல பதிவுகளில் கொந்தளிப்பூட்டும் பதிவுகளை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ளாா். இந்நிலையில் மேற்கு வங்கத் தோ்தல், மம்தா பானா்ஜி குறித்த அவரின் பதிவுகள் ட்விட்டா் நிறுவனத்தின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து கங்கனா ரணாவத்தின் சுட்டுரை கணக்கை நிரந்தமாக முடக்குவதாக அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த நிறுவன செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில், ‘சமூகத்துக்கு தீங்கிழைக்கக் கூடிய பதிவுகள் தொடா்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் ட்விட்டா் நிறுவனம் தெளிவாக உள்ளது. எனவே ட்விட்டா் விதிமுறைகளின்படி, கங்கனா ரணாவத்தின் சுட்டுரை கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT