கரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு மட்டுமே தீர்வு என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு.
நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து ஊரடங்கை அமல்படுத்தலாம்.
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.