பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே? மம்தா கேள்வி 
இந்தியா

பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே? மம்தா கேள்வி

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிஎம் கேர்ஸ் நிதி எங்கே சென்றது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிஎம் கேர்ஸ் நிதி எங்கே சென்றது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. பல்வேறு மாநில முதல்வர்களும் போதிய மருத்துவ வசதி வேண்டி மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கரோனா தொற்று பரவல் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். 

அப்போது பேசிய அவர், “இலவச கரோனா தடுப்பூசி தொடர்பாக நான் எழுப்பிய கோரிக்கைக்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து , “ ரூ.20,000 கோடி செலவழித்து புதிய நாடாளுமன்றம் மற்றும் சிலைகளை உருவாக்கும் போது ஏன் தடுப்பூசிகளுக்கு ரூ.30,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார். 

மேலும் பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே சென்றது? மத்திய அரசு இளைஞர்களின் உயிர்களை பணயம் வைக்கிறது? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT