பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே? மம்தா கேள்வி 
இந்தியா

பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே? மம்தா கேள்வி

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிஎம் கேர்ஸ் நிதி எங்கே சென்றது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிஎம் கேர்ஸ் நிதி எங்கே சென்றது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. பல்வேறு மாநில முதல்வர்களும் போதிய மருத்துவ வசதி வேண்டி மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கரோனா தொற்று பரவல் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். 

அப்போது பேசிய அவர், “இலவச கரோனா தடுப்பூசி தொடர்பாக நான் எழுப்பிய கோரிக்கைக்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து , “ ரூ.20,000 கோடி செலவழித்து புதிய நாடாளுமன்றம் மற்றும் சிலைகளை உருவாக்கும் போது ஏன் தடுப்பூசிகளுக்கு ரூ.30,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார். 

மேலும் பி.எம்.கேர்ஸ் நிதி எங்கே சென்றது? மத்திய அரசு இளைஞர்களின் உயிர்களை பணயம் வைக்கிறது? என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

#t20wc | குரூப் 2-வில் இருந்து அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்? | T20 World Cup |

நிலையற்ற வர்த்தகத்திற்குப் பிறகு, ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

மழை குறுக்கீடு: ஜம்மு காஷ்மீர் 527 ரன்கள் குவிப்பு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரின் பேரன் மணாலியில் மர்ம மரணம்!

SCROLL FOR NEXT