தில்லியில் புதிதாக 19,832 பேருக்கு இன்று(வெள்ளிக்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 19,832 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 12,92,867 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 341 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 91035 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 19085 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளதை அடுத்து மொத்தம் 11,83,093பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
நோய் பாதித்த 91035பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.