இந்தியா

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இக்பால் காலமானார்

DIN

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எம்.ஒய். இக்பால் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

கடந்த 1951ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி பிறந்தவர் இக்பால். 1974ஆம் ஆண்டு வழக்கறிஞர் படிப்பை முடித்த இவர், 1975ம் ஆண்டு சிவில் நீதிமன்றத்தில் தனது பயிற்சியை தொடங்கினார். 

தொடர்ந்து கடந்த 1996ஆம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், 2000ம் ஆண்டு நவம்பரில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டார். 

இதன்பின்னர் 2010ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இக்பால் டிசம்பர் 2012ஆண்டு முதல் பிப்ரவரி 2016ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவிவகித்தார். 

இந்நிலையில் தில்லியில் வசித்து வந்த அவர், உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70 ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT