தெலங்கானாவில் தினசரி கரோனா பாதிப்பு 5,892 ஆக உயர்வு: 46 பேர் பலி
தெலங்கானாவில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஒரே நாளில் 46 பேர் தொற்று பாதித்து பலியாகியுள்ளனர்.
தெலங்கானாவில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஒரே நாளில் 46 பேர் தொற்று பாதித்து பலியாகியுள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் 5,892 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 4.81 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் தொற்று காரணமாக 46 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,625 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து 78,851 பேர் தற்போது மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர்.
கரோனா பாதித்து 9,122 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் மொத்தம் 4,05,1645 பேர் இதுவரை குணமடைந்தனர்.
மே 5-ம் தேதி வரை 1.34 கோடி பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இறப்பு விகிதம் 0.54 ஆகவும், மீட்பு விகிதம் 83.12 ஆகவும் உள்ளது.