தில்லியில் மேலும் 10,489 பேருக்கு கரோனா: 308 பேர் பலி
தில்லியில் புதிதாக 10,489 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 10,489 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 10,489 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்த பாதிப்பு 13,72,475 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 308 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 20,618 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர்.
அதேசமயம் இன்று 15,189 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளதை அடுத்து மொத்தம் 12,74,140 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
நோய் பாதித்த 77,7179 பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.