விதிமீறல்: 322 வாகனங்கள் பறிமுதல்
பொதுமுடக்கத்தின் போது பெங்களூரில் விதிமுறைகளை மீறியதாக 322 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பொதுமுடக்கத்தின் போது பெங்களூரில் விதிமுறைகளை மீறியதாக 322 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் ஏப். 28 முதல் மே 24-ஆம் தேதி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் அவசரத் தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பெங்களூரில் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதோடு 292 இரு சக்கர வாகனங்கள், 8 மூன்று சக்கர வாகனங்கள், 22 நான்கு சக்கர வாகனங்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.