முகப்பு
இந்தியா

ஒடிசாவில் ஆறு லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

ஒடிசாவில் கரோனா பாதிப்பு ஆறு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

ஒடிசாவில் கரோனா பாதிப்பு ஆறு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் 11,805 பேர் தொற்றுக்கு புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 6,00,492 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 21 பேர் நோய்த் தொற்று பாதித்து இறந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2,294 ஆக உள்ளது. 

இதில் 6,611 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தும், 5,194 உள்ளூரிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. 

மாநிலத்தில் தற்போது 1,06,471 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் இதுவரை 4,91,674 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

இதுவரை 1.08 கோடி பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். வெள்ளியன்று மட்டும் 57,002 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.